கண்ணை சிமிட்டவும்
கடிகாரம் பார்க்கும் கம்ப்யூட்டர் யுகத்திலே…
விலைவாசி என்று
சொன்னதே, விலை வாசிக்கத்தான்… வாங்குவதற்கல்ல
என்று மாறிவிட்ட வியாபார யுகத்திலே,
மேகத்தில் தொட்டில்
கட்டி வெண்ணிலவைத் தாலாட்டிய கவிஞனுக்கு,
மின்னலில் ஷாக் கொடுக்கும் மின்சார யுகத்திலே,
தொடுதிரைக் கைப்பேசியால் விரலசைவில் வித்தைகள் செய்யும்
விஞ்ஞான யுகத்திலே…
பாசுமதி அரிசியிட்டு,
மினரல் தண்ணீர் ஊற்றி,
எரிவாயு அடுப்பெரித்து,
இன்டாலியன் குக்கரிலே,
பொங்குது பொங்கல்…
பொங்கலோ பொங்கல்!!!...
PONGAL O' PONGAL!!!…
உணவைக் கொடுக்கும் நிலத்துக்குக் கூட நன்றி சொல்லி விழா எடுத்த
தமிழனுக்கும்,
மற்றும் எல்லாருக்கும்,
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!