Friday 12 December 2014

எண்ணங்கள் உன்னால் நாண...

எந்த அந்நியப்பெண்ணையும் ஏக வசனத்தில் அழைக்க விட்டதில்லை “நான்”

ஒன்றல்ல இரண்டல்ல, வாடா... போடா... என்று ஆயிரம் முறை சொல்லியிருப்பாய்...

காரணமே தெரியாமல் குழைந்து குழைந்து சிரிக்கின்றேன்.

இதுவரையில்

இறுமாப்பில் இருண்டு கிடந்த என் எண்ணங்கள்

உன்னால் நாண, வண்ணங்கள் பெறுதே...


கன்னத்தில் சின்னம் தந்தால்
வெட்கங்கள் வருதே.

வெட்கத்தை தூரம் தள்ளி.
உள்ளந்தான் கெடுதே.

உள்ளத்தை அள்ளித் தரவே
எண்ணங்கள் வருதே.

எண்ணங்கள் உன்னால் நாண,
வண்ணங்கள் பெறுதே...


No comments:

Post a Comment