சக்தி
கண் இமைப்பதிலிருந்து கல் உடைப்பது வரை சக்தியில்லாமல் செயலாவதில்லை.
சக்தியே செயலாகிறது.
சக்தியே பலனாகிறது.
பிராணன் என்று சொல்லப்படும் உயிர்ச்சக்தி,
VITAL FORCE என்று
அறிவியல் சொல்லும் அந்த சக்தி.
அது இல்லையேல் எந்த இயக்கமும் வெளிப்படாது.
எல்லா அசைவுகளும் சக்தியாலேயே நிகழ்கின்றன.
நம் உடலை நாம் இயக்குவதற்கே சக்தி தேவை.
உலகில் விரவிக்கிடக்கின்ற சக்தியை ஒன்றிணைத்து ஒரு கம்பிக்குள்
கொண்டு வரும்
முயற்சியே மின்சாரம்.
இந்து தருமத்தில் பெண்ணை “சக்தி” என்றும், “சக்தியின் அம்சம்” என்றும்
வழிபடுகிறார்கள்.
அவள் பூமியின் ஒரு வடிவம் என்று புகழுரைக்கிறார்கள்.
பூமி எப்படி எல்லாப் பொருள்களையும் தன்னை நோக்கி ஈர்த்துக் கொள்கிறதோ,
அதேபோல்
பெண்ணும் எல்லாவற்றையும் தன்னுள் ஈர்க்கும் சக்தி படைத்தவள்.
இதில் இனபேதமே இல்லை.
ஆணோ, பெண்ணோ, இரண்டையுமே ஈன்றெடுப்பது பெண்தான்.