Saturday 7 March 2015

மகளிர் தினம்


இந்து தர்மத்தில் பெண்ணை “சக்தி” என்றும், “சக்தியின் அம்சம்” என்று வழிபடுகிறார்கள்.
பிராணன் என்று சொல்லப்படும் உயிர்ச்சக்தியின் அம்சம் பெண்,
VITAL FORCE என்று அறிவியல் சொல்லும் சக்தியின் அம்சம் பெண்.
சக்தி இல்லையேல் எந்த இயக்கமும் வெளிப்படாது.
பெண் இல்லையேல் எந்த இயக்கமும் அவசியப்படாது.
சக்தியே செயலாகிறது.
சக்தியே பலனாகிறது.
எல்லா அசைவுகளும் சக்தியாலேயே நிகழ்கின்ரன.
நம் உடலை நாம் இயக்குவதற்கே சக்தி தேவை.
உலகில் விரவிக் கிடக்கின்ற சக்தியை ஒன்றிணைத்து ஒரு கம்பிக்குள் கொண்டு வந்தால் மின் சக்தி
மனதில் பரவிக் கிடக்கின்ற சக்தியை ஒன்றிணைத்து ஒரு கோட்டுக்குள் கொண்டு வருபவள் பெண் சக்தி
பெண்ணை பூமியின் ஒரு வடிவம் என்று புகழுரைக்கிறார்கள்.
பூமி எப்படி எல்லாப்பொருட்களையும் தன்னை நோக்கி ஈர்த்துக்கொள்கிறதோ,
அதே போல் பெண்ணும் எல்லாவற்றையும் தன்னுள் ஈர்க்கும் சக்தி படைத்தவள்.
இதில் இனமேதமே இல்லை...
ஆணோ, பெண்ணோ இரண்டையுமே ஈன்றெடுப்பது பெண்தான்.
மகளிர் தின வாழ்த்துக்களுடன்,
ராஜேஷ்குமார் ஜெயராமன்

No comments:

Post a Comment