ஓசையின்றி உரசி
உயிரில் உறைந்து.
உயிரில் உறைந்து.
ஓரணுவும் மீதமின்றி,
உள்ளம் நிறைந்து,
உள்ளம் நிறைந்து,
அவன் உப்புக்காகிதக் கன்னத்தில்
அவள் நித்தம் பொழிந்த சின்னத்தில்
அவள் நித்தம் பொழிந்த சின்னத்தில்
காலம் மறந்து நாணம் துறந்து
கற்பின் இலையில் காதல் விருந்து.
கற்பின் இலையில் காதல் விருந்து.
விருந்தைச் சுவைத்த ஏகாந்த கணங்கள்,
அருந்திக் கிடைத்த ஆனந்த ரணங்கள்.
அருந்திக் கிடைத்த ஆனந்த ரணங்கள்.
ஸ்தூலத்தில் நீரெழுத்தாய்க் கலைந்திட,
சூட்சுமத்தில் கல்லெழுத்தாய் நிலைத்திட
சூட்சுமத்தில் கல்லெழுத்தாய் நிலைத்திட
உயிரின் உறவுக்காய்
இடம் தந்த வயல்வெளி !
இடம் தந்த வயல்வெளி !
உறவின் மகிழ்வுக்காய்
இதம் தந்த மணல்வெளி !
இதம் தந்த மணல்வெளி !
இடைவெளிகள் ஏதுமின்றிக்
இதழ் சொன்ன சேதிகளை
இதழ் சொன்ன சேதிகளை
காற்றுடன் தலையசைத்து
கதை பேசும் புல்வெளி !
கதை பேசும் புல்வெளி !
No comments:
Post a Comment