அடங்கா மனம்
ஆர்ப்பரிக்க,
ஆற்றாமை கொப்பளிக்க,
சிந்தித்தாலும் சந்தித்தாலும்
அழுதாலும்
அமைதியானாலும்
என் கடைசி
அணுவையும் சுட்டெரிக்கும்,
உன் உறவின்
சுகமும், பிரிவின் ரணமும்...
நீ இல்லாத
தனிமையில்
நானே இல்லாத
வெறுமையில்
சிந்தித்தாலும்,
சந்தித்தாலும்,
அழுதாலும்,
அமைதியானாலும்,
உன் ஒரு புன்னகை
போதும்,
நான் மீண்டும்
ஜனிக்க!...
No comments:
Post a Comment