Friday 12 December 2014

நிஜம் நிழலாகிறது.

எப்போதும் பிசாசு போல் கறுப்பாய்ப் பின்தொடரும் நிழல் 
இருளின் கறுப்பில் இல்லாது போனாலும்,
அந்த இருளையே பிசாசாய் எண்ணி பயந்து வெளிச்சத்தைத் தேடி மீண்டும் நிழற்பேயுடன் ஒட்டி உறவாடிய பிள்ளைக் கணங்கள்.

சிலநாள் பார்வைகளையும், சிலநாள் ஸ்பரிசங்களையும்,
சிலநாள் கண்ணிர்த் துளிகளையும் காதல் என்று எண்ணிக்கொண்டு
நிஜமாய்த் தெரிந்த அத்தனைக் காதல்களும்(?) நிழலாய்ப் போனபின் அழுது துடித்த இளமைக் கணங்கள்.

“அந்தக் காலத்தில நாங்கள்லாம்” என்ற வார்த்தையை அடிக்கடிப் பயன்படுத்தும் முக்கால்கிணறு தாண்டிய வயது வரும்போது,
அடுத்த தலைமுறையின் சிறுவயதுப் பிழைகளைக் கண்டு
நம் இறந்த காலத்தையும் திருத்த முடியாமல்,
இந்தத் தலைமுறைகளின் நிகழ்காலத்தையும் திருத்த முடியாமல், எதிர்காலத்தைக் கரித்துக் கொட்டும் வயோதிகக் கணங்கள்...

வாழும் நாட்களில் எதையெதையோ வெளிச்சம் என்றெண்ணித் தேடித் தேடிக் கடைசியில் நிழலை மட்டுமே நீளமாக்கிக் கொண்டிருக்கும் இந்த மனதுக்கு எப்போதாவது புரிகிறது,

என் இந்த உடல் என்ற நிஜமும் ஓர் நாள் நிழலாகப் போகிறது என்று...
புரிந்து மட்டும் என்ன பயன்?.


சிரிக்காமல் போனேனா?... அழாமல் போனேனா?...


No comments:

Post a Comment